லண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் ! லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..

லண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, “18.05.2009” என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை, இயக்குனர் தத்துரூபமாக படமாக்கியுள்ளதோடு. இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை அப்பட்டமாக கோடிட்டு காட்டியுள்ளார். இதனை சகித்துக் கொள்ள முடியாத சில சிங்கள அடி வருடிகள், கருணாவின் ஆட்களை துணைக்கு அழைத்துக் கொண்டு, அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

லண்டனில் உள்ள இலங்கை தூதுவரலாயத்தின் உதவியோடு, இந்த படத்தை வெளிட சில சக்திகள் எதிர்ப்பு காட்டி வருவதோடு. இது சமாதானத்தை சீர் குலைக்கும், நடவடிக்கை என்று கூறுகிறார்கள். மேலும் படத்தை வெளியிட உள்ள குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். சிங்களம் போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் இவர்கள். இதுபோல ஒரு படம் லண்டனில் ஓட உள்ளதாகவும். இது வெளியானால் , மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் சிங்களத்திற்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.

லண்டனில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசிய சிங்களவர் ஒருவரின் உரையாடலை பதிவுசெய்த ஏற்பாட்டுக் குழுவினர். அதனை ஹரோ பொலிஸ் நிலையத்தில் கொடுத்து முறைப்படி, வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இதற்கு உதவிய சட்டத்தரணிக்கு இவ்வேளையில் நன்றிகளையும் தெரிவிப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளார்கள். எது எவ்வாறு இருப்பினும் , 20ம் திகதி ஞாயிறு அன்று பெரும் தொகையான மக்கள் ஹரோ சபாரி சினிமாவுக்கு சென்று, இந்த படத்தை பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-athirvu.com