கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்?

வார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா? பொது சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்த விரும்புவீர்களா?

அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா?

அப்படியானால், வரும் மே 5-ம் தேதி கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் இந்த மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.

20 ஆம் நூற்றாண்டின் வரலாறு குறித்து மேலோட்டமான அறிவு கொண்டவர்களுக்கும் கூட மார்க்சிஸ்ட் புரட்சிகர அரசியலுக்கு கடமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

அவரது எண்ணங்கள் சமூக மாற்றங்களைத் தூண்டும் விதமாக கருதப்பட்டு, ஏற்கப்பட்டன. பெரும்பாலும் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்ல் மார்க்ஸ்

அவரது கோட்பாடுகள், சுதந்திரம் இல்லா மற்றும் மாபெரும் படுகொலைகள் இல்லா சர்வாதிபத்தியத்துடன் தொடர்பு கொண்டதாயிற்று. மார்க்ஸ் கொள்கைகள் பிரிவினை வாதம் கொண்டதாக தொடர்ந்து கருதப்படுவது வியப்பிற்குரியதல்ல.

ஆனால், மார்க்ஸ் சின் மற்றொரு மனிதாபிமான முகம் மற்றும் அவரது எண்ணங்கள் இந்த உலகத்தை சிறப்பாக மாற்ற பங்களித்துள்ளது.

மார்க்ஸ் சில விஷயங்களை சரியாகக் கொண்டிருந்தார்: அதி பணக்காரர்கள் கொண்ட சிறு குழுவினர் உலகின் பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்ய வரும், முதலாளித்துவ முறை எளிதில் பற்றிக்கொள்ளக்கூடியது, பொருளாதார நெருக்கடியால் நம்மில் பாதிபேரைக் கொல்லக்கூடியது, தொழில்மயமாக்கல் மனித உறவுகளை மாற்றும்.

இப்படி இருந்தும் கார்ல் மார்க்ஸ் நமக்கு எதுவும் செய்யவில்லை என்று எண்ணுகின்றீர்களா? அவர் 21ம் நூற்றாண்டிற்கு என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள வாசியுங்கள்.

கார்ல் மார்க்ஸ்

1.அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பினார், வேலைக்கு அல்ல.

இது பெரும்பாலானோர் விடுக்கும் அறிக்கை. 1848ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்துகொண்டிருந்த நேரம் குழந்தை தொழிலாளர் என்பது நியதியாக இருந்தது. இன்றும் பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழிலாளராக இருக்கிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணக்கு சொல்கிறது (2016). தொழிற்சாலைகளில் இருந்து பள்ளிக்கு இந்த அளவு குழந்தைகள் செல்லத் தொடங்கியதற்கு மார்க்ஸ்சிற்கு அந்த குழந்தைகள் கடமைப்பட்டுள்ளன.

மாபெரும் பொருளாதார நிபுணர்கள்: அவர்கள் எண்ணங்கள் இன்று நமக்கு உதவுவது எப்படி என்ற நூலாசிரியர் லிண்டா யுவே கூறுகிறார், ” மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் 1848ன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து அம்சங்களில் ஒன்று, அனைத்து குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி, தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது என்பதாகும்.”

”குழந்தைகளின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது மார்க்ஸ், எங்கல்ஸ் அல்ல. ஆனால், மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிளம்பிய குரலுக்கு வலுசேர்த்தது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இளம் குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை.” என்கிறார் யுவே.

கார்ல் மார்க்ஸ்

2.உங்களுக்கு ஓய்வு நேரம் வேண்டும் என்றார். மேலும் அந்த ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியதும் நீங்கள் தான் என்றார்.

இப்போது நீங்கள் நாளொன்றுக்கு 24 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியதில்லை வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியதில்லை என்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்களா? மதிய உணவு இடைவேளை வேண்டுமா?. வயதானதும் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற விரும்புகிறீர்களா?

உங்கள் விடை இதில் ஏதேனும் ஒன்றிற்கு ஆம் என்றால், நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது மார்க்ஸ் அவர்களுக்குத்தான்.

லண்டன் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் மைக் சேவேஜ் கூறுகிறார், “நீண்ட மணி நேரம் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டால், உங்கள் நேரம் உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த உயிருக்கு நீங்கள் இனிமேலும் பொறுப்பு இல்லை.”

முதலாளித்துவ சமுதாயத்தில் எப்படி வாழ்வது என்பதைப்பற்றி மார்க்ஸ் எழுதியுள்ளார். பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள ஒரே ஒரு விஷயத்தை-தங்கள் உழைப்பை- பணத்திற்காக விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்ஸைப் பொறுத்தவரையில் இது பெரும்பாலும் சமச்சீரற்ற பரிவர்த்தனை. இது சுரண்டலுக்கு வழிவகுக்கும், அந்நியமயமாதலுக்கும் வழிவகுக்கும். அடிப்படை மனிதகுலத்துடன் தொடர்பு அறுந்து போன உணர்வை ஏற்படுத்தும்.

தன் சக தொழிலாளர்களுக்கு மார்க்ஸ் மேலும் உரிமைகள் வேண்டும் என்று பாடுபட்டார். தொழிலாளர்கள் சுயேச்சையாக இருக்கவேண்டும், படைப்பாற்றலுடன் இருக்கவேண்டும் இவற்றுக்கும் மேலாக தங்கள் சொந்த நேரத்திற்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

“அடிப்படையில், நாம் வாழும் வாழ்வு நாம் செய்யும் வேலையின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படாததாக இருக்கவேண்டும் என்ற மார்க்ஸ் கூறுகிறார். ஓரளவு சுயாட்சி கொண்ட வாழ்க்கை, நாம் எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய நிலை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இந்த கருத்துகள் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளக்கூடிய லட்சியங்களாகி உள்ளன.” என்கிறார் சேவேஜ்.

“மார்க்ஸ் பிரபலமான கருத்து ஒன்றை வைத்திருந்தார், காலையில் வேட்டையாடி, மதியம் மீன் பிடித்து, மாலையில் கால்நடைகளை மேய்த்து, இரவில் உணவுக்குப்பின் திறனாய வேண்டும்.” விடுதலை, மீட்பு மற்றும் அந்நியப்படுத்தலுக்கு எதிராக சண்டையிடுதல்.” என்றும் அவர் கூறுகிறார்.

கார்ல் மார்க்ஸ்

3உங்களுக்கு பணியில் மனநிறைவு வேண்டும் என்று அவர் விரும்பினார்.

உங்கள் வேலையில் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் எப்போது கிடைக்கும் என்றால், “தாங்கள் செய்த பணியில் தங்களைக் காணும் சூழல் ஏற்படும் போது தான்.”

வேலை நமக்கு படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும், நம்மைப்பற்றிய நல்ல விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய மனித நேயமோ, நம்முடைய புலனறிவோ அல்லது திறனோ இவற்றை வெளிப்படுத்தும் விஷயமாக இருக்க வேண்டும்.

உங்கள் வேலை அவலமானதாக இருந்தால், உங்கள் உணர்வுத்திறனை பயன்படுத்தாத ஒன்றாக இருந்தால், நீங்கள் வெறுப்படைந்து மனமுறிவு கொள்வீர்கள். அந்நியப்படுத்தவும் செய்யலாம். இவை சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள இதமாக பேசக்கூடிய எழுச்சியூட்டும் சொற்பொழிவாளர்கள் பேசும் சமீபத்திய வார்த்தைகள் அல்ல. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் வார்த்தைகள்.

அவர் 1844 வெளியான பொருளாதாரம் மற்றும் தத்துவ ஏடுகள் என்ற தனது முந்தைய புத்தகத்தில் மார்க்ஸ் நலன் சார்ந்த பணி மனநிறைவு குறித்து சிந்தித்த முதலாவது சிந்தனையாளர்களில் ஒருவர். நாம் அதிக நேரம் வேலையில் செலவிடுகிறோம். எனவே நாம் அந்த வேலையின் மூலம் சிறிது மகிழ்ச்சியை பெறவேண்டும் என்று அவர் காரணம்சொல்கிறார்.

நீங்கள் படைத்தவற்றில் அழகை எதிர்பார்ப்பது அல்லது நீங்கள் உற்பத்தி செய்வதில் பெருமிதத்தை அனுபவிப்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய வகையில் பணியில் மனநிறைவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார்.

முதலாளித்துவம் தனது வேகத்திற்கான தேடலில், அதிகரிக்கும் உற்பத்தியில் மற்றும் லாபம் ஆகியவை காரணமாக வேலையை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளது.

நாள் முழுவதும் ஒரு ஸ்க்ரூவில் மூன்று திருகுகள் மட்டும் இழைக்கவேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு முடிவே இல்லாமல் பல ஆயிரம் முறை செய்யவேண்டுமானால் உங்களால் அதில் மகிழ்ச்சியைக் காண்பது கடினம்.

கார்ல் மார்க்ஸ்

4.மக்களை மாற்றத்திற்கான காரணியாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

உங்கள் சமுதாயத்தில் ஏதேனும் தவறு இருந்தது என்றால், நீங்கள் ஏதேனும் அநீதி, அநியாயம் அல்லது சமத்துவம் இல்லாதிருப்பதை உணர்ந்தால், நீங்கள் பிரச்சினை எழுப்பி, மக்களை திரட்டி நீங்கள் போராடி மாற்றத்திற்காக பாடுபடவேண்டும.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில், புதிய முதலாளித்துவ சமுதாயம், அதிகாரமற்ற ஊழியரை, உறுதியான மற்றும் நகர்த்த முடியாத கல்லாகப் பார்த்திருக்கலாம்.

ஆனால் கார்ல் மார்க்ஸ் மாற்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார், மற்றவர்களையும் அதைக் கடைபிடிக்க உற்சாகப்படுத்தினார். இந்த எண்ணத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் சமுதாய பழுது நீக்கலுக்கு பெரும் வழிவகுத்தது. இன அடக்குமுறைக்கு எதிராக, ஓரினச்சேர்க்கைக்கு விரோதமாக, வகுப்புவாரி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.

லண்டனில் மார்க்சியம் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான லூயிஸ் நீல்சன் கூறுகையில், “ஒரு சமுதாயத்தை மாற்ற உங்களுக்கு புரட்சி தேவை; நாம் சமுதாயத்தை மேம்படுத்த ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இதன் மூலம்தான் சாமான்ய மக்களுக்கு தேசிய சுகாதாரத்திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்யும் உரிமையை பெற முடிந்தது.”

மார்க்ஸ் பெரும்பாலும் தத்துவஞானியாக பார்க்கப்படுகிறார். ஆனால் நீல்சன் அதை ஏற்க மறுக்கிறார். “அவர் ஏதோ தத்துவம் செய்யவே பாடுபட்டார் என்றும் கோட்பாடுகளை இயற்றவே முயன்றார் என்றும் பிரமையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் மார்க்ஸ் தன் வாழ் நாளில் செய்தது என்ன என்று பார்த்தால், அவர் ஒரு கொள்கையாளராக இருந்தார். அவர் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினார். அவர் போராடும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

“அவரது கோஷமான “உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்பது ஆயுதம் தூக்க விடுத்த அழைப்பு. நாம் மேம்படுத்துவதற்காக போராடவேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதே மார்க்சின் உண்மையான கொடையாக இருந்தது. அது மார்க்சிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது. போராடுபவர்கள் அனைவரும் தங்களை மார்க்சிஸ்டுகள் என்று கூறிக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு கேள்வி.” என்கிறார் அவர்.

பெண்கள் தேர்தலில் எப்படி வென்றார்கள்? என்கிறார் நீல்சன்.

நாடாளுமன்றத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் மீது இரக்கப்பட்டு இந்த உரிமையை தரவில்லை, பெண்கள் திரண்டு போராடினார்கள். நாம் வார இறுதி விடுமுறையை எப்படி பெற்றோம்? எப்படியெனில், தொழிற்சங்கங்கள் இதற்காக போராட்டத்தில் குதித்தன. சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்த நாம் எப்படி ஒவ்வொன்றிலும் வெற்றிபெற்றோம்?

மார்க்ஸ் சமுதாய மாற்றத்திற்காக போராடும் என்ஜினாக செயல்பட்டார். பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் தலைவர் குவின்டின் ஹாக் 1943ல் கூறினார், “நாம் அவர்களுக்கு சீர்திருத்தத்தை கொடுக்க வேண்டும் அல்லது அவர்கள் நமக்கு புரட்சியை வழங்குவார்கள்.”

கார்ல் மார்க்ஸ்

5.அரசு பற்றி எச்சரித்தார், பெரிய தொழில்கள் மிகவும் வசதியாக மாறிவருகிறது என்றார். மேலும் ஊடகங்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

அரசுகளுக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

கூகுள் சீனாவுக்கு பின்கதவு சாவியைக் கொடுத்தது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பேஸ்புக் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் விருப்பங்களை மாற்றக்கூடிய முறைமையை கட்டமைக்கும் நிறுவனத்திற்கு வெளியிட்டது குறித்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஏற்கனவே இதுபோன்ற எதிர்ப்புகளை 19ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டனர்.

ஆம் அவர்கள் அன்றைக்கு சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் போனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியரும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருமான வலேரியா வீஸ் கூறுகையில், ”அவர்கள் இருவரும் இதன் அபாயங்களை முதல் முறையாக இனங்கண்டு ஆய்ந்து விளக்கியவர்கள்” என்கிறார்.

மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், அரசுகளுக்கும், வங்கிகளுக்கும், வர்த்தகத்துறைக்கும் காலனிமயமாக்கலுக்கு பிரதான காரணியாக திகழ்ந்த ஒத்துழைப்பு வலையங்கள் குறித்து மிகவும் கவனமாக ஆராய்ந்தனர். ஆனால் அவர்கள் இதை 15ம் நூற்றாண்டிலேயே இது பற்றி சொன்னார்கள்” என்றார் வேக் வீஸ்.

ஆனால் அவர்கள் நிறைவாக என்ன சொன்னார்கள்? ஒரு நடைமுறை, அது கண்டிக்கத்தக்கதோ இல்லையோ? வர்த்தகத்திற்கும் அரசுக்கும் நல்லதாக நிரூபணம் ஆனது. உதாரணத்திற்கு அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை மேலும் விரிவு படுத்தும், சட்டம் இயற்றுவதும் அதற்கு ஆதரவாக அமையும், என்கிறார் வேக் வீஸ்.

மார்க்ஸ் அதிகார வர்க்கம் மற்றும் ஊடகம் குறித்து தெரிவித்த கூரான கருத்துகள் 21 ஆம் நூற்றாண்டிலும் புதிதான கருத்து போல பார்க்க வைக்கிறது.

“ஊடகங்கள் மக்களிடையே கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்த முக்கியமானது என்பதை உணர்ந்தார். இன்று நாம் போலிச்செய்தி பற்றியும், ஊடகங்கள் அலறுவது பற்றியும் பேசுகிறோம். ஆனால் மார்க்ஸ் என்றைக்கோ இதுபற்றி கருத்து தெரிவித்து விட்டார்” என்கிறார் வேக் வீஸ்.

அந்த காலகட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளை பகுப்பாய்ந்த அவர், இந்த கருத்தினை எட்டினார்: சிறு குற்றங்கள், மற்றும் ஏழை மக்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் மிகைப்படுத்தப்பட்டு அளவுக்கு அதிகமாக செய்தியாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்வாக்கானர்கள் புரியும் குற்றங்கள், அரசியல் மோசடிகள் குறைவாக தெரிவிக்கப்படுகின்றன” என்கிறார் வேக் வீஸ்.

சமுதாயத்தை உடைக்க தேவையான பயனுள்ள வாகனம் ஊடகம்.

கார்ல் மார்க்ஸ்

“ஆங்கிலேயர்களிடம் இருந்து வேலையை அயர்லாந்து மக்கள் திருடுகின்றனர் என்று சொல்வது, கருப்பர்களுக்கம் வெள்ளையின மக்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிடுவது, பெண்களுக்கு எதிராக ஆண்களை தூண்டிவிடுவது, உள்ளூர் மக்களை வந்தேறிகளுக்கு எதிராக தூண்டிவிடுவது, ஏழை மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது, அதிகார வர்க்கத்தினர் எந்த தடையும் இன்றி தப்பினர்.” என்கிறார் வேக் வீஸ்.

இன்னொரு விஷயம், முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரே மார்க்சியம் தோன்றியது.

இந்த தகவல் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால்இதையும் பாருங்கள். இந்த உலகம் முதலாளித்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் மார்க்சியம் பற்றி ஏற்கனவே வாசித்துவிட்டது.

யூவே சொல்கிறார், முதலாளித்துவம் என்ற சொல் பொருளாதாரத்தின் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித் என்பவரால் இயற்றப்பட்டதில்லை. அவர் சந்தையில் உள்ள “கண்ணுக்கு தெரியாத கை” என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தினார். ஆனால் 1854வில் வெளிவந்த நாவல் ஒன்றில் வில்லியம் மேக்பீஸ் தாக்கரே என்பவர் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.

“முதலாளித்துவம் என்ற சொல்லை, தாக்கரே முதலீட்டின் சொந்தக்காரர் என்பதை குறிக்கும் விதமாக குறிப்பிட்டு இருந்தார்.” என்கிறார் யூவே

“எனவே முதலாளித்துவம் என்ற சொல்லை பொருளாதாரத்தில் பயன்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ், அவர் தனது 1867 ஆம் ஆண்டு இயற்றிய கேப்பிட்டல் (டாஸ் கேப்பிட்டல்) என்ற நூலில் இதனை பயன்படுத்தியிருந்தார். அதன் பின்னர் மார்க்சியம் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் முதலாளித்துவம் என்ற சொல் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியது.” -BBC_Tamil