ரஜினி முதல்ல இதை செய்யுங்க, அப்புறம் அரசியலுக்கு வாங்க..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தீவிர அரசியலில் இறங்க உள்ளார் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் ரஜினிக்கு வரவேற்பு இருந்தாலும் அதே அளவிற்கு எதிர்ப்புகளும் இருந்து தான் வருகின்றன.

இதற்கு முக்கிய காரணமே ரஜினியின் மௌனம் தான் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலா பிரச்சனைகளுக்கு ரஜினிகாந்த் மௌனம் காப்பதே அவரது இமேஜை டேமேஜ் செய்து விடுகிறது. தற்போதும் அப்படி தான் கோச்சடையான் பட விவகாரம் நெட்டிசன்களை விமர்சிக்க வைத்துள்ளது.

ரஜினியின் திரைப்பயணத்தில் பெரும் சறுக்கத்தை ஏற்படுத்திய கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் இன்று வரை அந்த கடனை திருப்பி செலுத்ததால் அந்நிறுவனம் நீதி மன்றத்தை நாடியுள்ளது.

இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் லதா ரஜினிகாந்தை எச்சரித்தது மட்டுமில்லாமல் வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லையென்றால் ஜெயிலுக்கு தான் போக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரத்தை பற்றியும் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார் ரஜினிகாந்த். இதனால் நெட்டிசன்கள் மக்களை சட்டம் மீற கூடாது என கூறும் நீங்கள் அதை உங்கள் மனைவிக்கு சொல்லி கொடுக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் முதலில் உங்களது மனைவியை திருத்துங்கள் அப்புறம் அரசியலுக்கு வாங்க எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

-athirvu.in