பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டார். வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையில் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்படுத்தலாம்,

சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளஸ்டிக் ( Bio Degradable plastic) இதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: