இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

ராமேஸ்வரம்: கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மீன் பிடி தடை கால முடிவடைந்து மீனவர்கள் இப்போதுதான் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற போதே ச்சத்தீவு அருகே 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்ட்டனர்.

இந்த நிலையில் இன்று கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: