நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 27 பேர் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.எனினும் மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களது நான்கு நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காரைநகர் கடற்படை முகாமில் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மீதும் இலங்கை புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை புதிய மீன்படி சட்டத்தின் படி, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: