இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: ஐ.நா.

மனித நல மற்றும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.,வின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார்.

இதில், மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பேகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

-4tamilmedia.com

TAGS: