பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை

புதுடில்லி: பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்தார்.

பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய பதிவேடு துவக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது:

நாட்டில் நடக்கும், 30 சதவீத பாலியல் குற்றங்கள், பெண்கள் காப்பகத்தில் தான் நடக்கின்றன. எனவே, இந்த குற்றங்களை கண்காணித்து, குற்றவாளிகள் மீது, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: