ஒரு ஜாதிக்காக மட்டும் படம் எடுக்கணுமா? பிரபல இயக்குனர் கேள்வி

தமிழ் சினிமாவில் ஜாதி பற்றிய படங்கள் பலவந்துள்ளன. அதில் சமீபத்தில் பெரிதும் பேசப்பட்ட படம் பரியேறும் பெருமாள்.

இந்த படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்..

ரஞ்சித் அந்தப் படத்தை தயாரித்தது தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம். பா.ரஞ்சித் எப்போதும் வெளிப்படையாக பேசுகிறார். அதனால், ரஞ்சித் என்றால் இந்த சாதியை சேர்ந்தவர் என்று ஒரு கட்டம் கட்டப்படுகிறார். அதனால் மக்களும் அதை ஒரு சாதியினர் படமாகவே பார்க்கிறார்கள்.

“ஒரு சாதி படம் என்று எடுத்தால், அந்த சாதி சம்மந்தப்பட்ட மக்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் மட்டும் படம் பார்ப்பதற்கு ஏன் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி” என சுசீந்திரன் கேட்டுள்ளார்.

-cineulagam.com