விஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி! – குவியும் பாராட்டு

விஜய் செய்யாததை தைரியமாக செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி! – குவியும் பாராட்டு

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் சர்கார் படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்தது. முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் அலைமோதியதால் பிளாக் டிக்கெட்டுகள் 1000 ரூபாயில் தொடங்கி மிக அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இது பற்றி அரசியலில் இருக்கும் பலர் விமர்சித்தனர். அரசை விமர்சிக்கும் முன் சினிமா துறை இதை தடுக்க வேண்டும் என கூறினர். ஆனால் விஜய் இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரஜினி நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள 2.0 படத்திற்கு ரசிகர் மன்ற காட்சி டிக்கெட்டுகள் வெளியில் விற்கக்கூடாது, அதிக விலை வைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது ரஜினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-cineulagam.com