சத்தீஸ்கர் என்கவுன்டர் : 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்பூர் : சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் போலீசார் இருவர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கிஷ்தாராம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகளும், 2 போலீசாரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சண்டையும் தொடர்ந்து நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

-dinamalar.com

TAGS: