பாட்டு என்னுடையது, பணத்தில் பங்கு இல்லையா?: இளையராஜா எச்சரிக்கை

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இப்போதும் அதிகம் பிரபலம். பல இசைக்கச்சேரிகளில் இளையராஜா பாடல்கள் தான் அதிகம் இருக்கும்.

ஏற்கனவே தன் பாடல்களை பாட கூடாது என SPBயுடன் இளையராஜா பிரச்சனை செய்தது முன்பே பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இளையராஜா நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் “நீங்கள் என்னுடைய பாட்டை தான் பாடுகிறீர்கள். இலவசமாக பாடவில்லை, பணம் வாங்குகிறீர்கள். பாட்டு என்னுடையது – ஆனால் பணத்தில் பங்கு தரமாடீர்கள்” என இளையராஜா பேசியுள்ளார்.

முன் அனுமதி இல்லாமல் என் பாடலை பாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

-cineulagam.com