விவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி

மும்பை, :மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, விவசாயி அனுப்பிய, 1,064 ரூபாய், ‘மணியார்டரை’ பிரதமர் அலுவலகம், அவருக்கு திருப்பி அனுப்பியது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. நடப்பு ஆண்டில், வெங்காயம் மற்றும் பூண்டின் விளைச்சல் அதிகரித்ததால், அவற்றின் கொள்முதல் விலை சரிந்தது.சமீபத்தில், நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த, சஞ்சய் சாடே என்ற விவசாயி, தன் வயலில் விளைந்த, 760 கிலோ வெங்காயத்தை, சந்தையில் விற்பதற்காக எடுத்து வந்தார்.வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு, 1,064 ரூபாய் மட்டுமே கிடைத்தது.இதனால் அதிருப்தி அடைந்த சஞ்சய், வெங்காயம் விற்றதில் கிடைத்த பணத்தை, பிரதமரின் நிவாரண நிதிக்கு, மணியார்டராக அனுப்பி வைத்தார்.ஆனால், இதை ஏற்க மறுத்த பிரதமர் அலுவலகம், அந்த பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பியது.

-dinamalar.com

TAGS: