கேரளாவில் இன்று,’பந்த்’ :பள்ளி,கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) ஒரு நாள் முழு அடைப்புக்கு, சபரிமலை கர்ம சமிதி அழைப்பு விடுத்துள்ளது. இன்று, ( ஜன. 3)கடைகள் திறக்கப்படாது என்றும், வாகனங்கள் இயங்காது என்றும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று (ஜன.2) திருவனந்தபுரம் அருகே, நெய்யாற்றின்கரையில் இருந்து, 200 கி.மீ., துாரம் நடந்தே சபரிமலை சென்ற, சில பக்தர்கள், பெண்கள் வந்ததால், சபரிமலையின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி, இருமுடி கட்டை, எருமேலி சாஸ்தா கோவிலில் வைத்து விட்டு, ஊர் திரும்பினர்.

இந்நிலையில் பெண்கள் சபரிமலை வந்ததை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மாநிலம் தழுவிய பந்த்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ள.

-dinamalar.com

TAGS: