அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

இந்த ஜல்லிகட்டில் மொத்தம், 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 7 குழுக்களாக மொத்தம், 697 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த வீரராக 15 காளைகளை பிடித்த ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

10 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்தார். 9 காளைகளை பிடித்த அஜய் மூன்றாவது இடம் பிடித்தார். சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று, 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பரிசு வழங்கினார்.

tamil.oneindia.com

TAGS: