திராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி இவதான்!

இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல், தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார் கவிஞர் தாமரை.

நெடுநாட்களாக திரைப்படத்துறையில் பாடல்களுக்காக பெண்ணிய உணர்வுகளையும் ஆண் கவிஞர்களே எழுதிவந்த சூழலில், ஆபாசம் – அயல்மொழி கலப்பின்றி பெண்ணிய உணர்வுகள் உள்ளிட்ட அனைவருக்குமான பாடல்களை எழுதி தேர்ந்த கவிஞர் என பெயர் பெற்றவர் தாமரை. தமிழ்த்தேசிய சித்தாந்தத்தின் மீது பற்றுகொண்டவர் என பொதுவெளியில் அறியப்படுபவர்.

அத்தகைய தாமரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் நடைபெற்ற கம்ம நாயுடு சமூகத்தவரின் மாநாடு ஒன்றில் பேசிய மதிமுகவின் பெண் உறுப்பினர் தனமணிவெங்கட் “தமிழர்கள் வந்தேறிகள், தெலுங்கு நாயக்கர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்” என பேசியிருப்பதற்கு காட்டமான எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கவிஞர் தாமரை, “தமிழகத்திலேயே தமிழர்களை வந்தேறிகள் என்றும், தெலுங்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்றும் ஒரு அரசியல்வாதியால் பேசமுடிகிறது என்றால் திராவிட தேசியம் தனக்கான கடைசி ஆப்பையும் வைத்துக்கொண்டது என்று பொருள்.

உரக்கச் சொல்கிறேன்.. “இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல், தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள்” என ஆவேசம் காட்டியுள்ளார்.

-athirvu.in

TAGS: