ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்… கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 6 பேர் பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி வீட்டின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது 6 பேரையும் விஷவாயு தாக்கியது.

உயிரிழந்த 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கழிவுநீர் தொட்டியில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி மயங்கினார். இதையடுத்து, அவரை காப்பாற்ற உறவினர்களான கண்ணன், கார்த்தி உதவிக்கு வந்துள்ளனர். கண்ணன், கார்த்தியை அடுத்து பரமசிவம், லட்சுமிகாந்தன் என்பவர்கள் 3 பேரையும் காப்பாற்ற முயன்ற போது, அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தொட்டியில் இறங்கிய சுரதா பாய் என்ற பெண்ணும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: