பாக்.,கிற்கு தண்ணீரை நிறுத்துவோம் : கட்காரி

புதுடில்லி : பயங்கரவாதத்தை பாக்., நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாக்.,க்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கட்காரி கூறுகையில், இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாக்.,க்கு தண்ணீர் செல்கிறது. நாங்கள் அதை தடுத்து நிறுத்த விரும்பவில்லை. ஆனால், நீர் ஒப்பந்தத்திற்கு அடிப்படையே இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான உறவுடனும், நட்புடனும் இருக்க வேண்டும் என்பது தான். அது முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. அதனால் அந்த ஒப்பந்தத்தை நாம் பின்பற்ற தேவையில்லை.

பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளுக்க ஆதரவு அளித்து வருகிறது. பாக்., பயங்கரவாதத்தை நிறுத்தா விட்டால், பாக்.,க்கு செல்லும் நதிநீரை நிறுத்துவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அதனால் அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளை இந்தியா துவங்கி உள்ளது. அந்த நதிகளின் நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும் என்றார்.

-dinamalar.com

TAGS: