பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்!

காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

-athirvu.in

TAGS: