தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை

புதுடில்லி: தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக வற்றிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதில்: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து 2008 – 17 காலகட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 358 தாலுகாவில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது. 195 இடங்களில் அபாயகரமானதாக உள்ளது. 35 இடங்களில் முழுமையாக உப்புநீர் சேர்ந்து நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

-dinamalar.com
TAGS: