கைக்குட்டை, துப்பட்டா முகக்கவசம் ஆகலாம்: பீலா ராஜேஷ்

சென்னை: ‘கைக்குட்டை, துப்பட்டா போன்றவற்றையும், முக கவசமாக பயன்படுத்தலாம்’ என, சுகாதார துறை செயலர், பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

‘டுவிட்டர்’ பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: பொது மக்கள், அத்தியாவசிய பணிகளுக்கு, வெளியில் வரும்போது, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால், தங்கள் கைக்குட்டை, பெண்கள் தங்களின் துப் பட்டா, ஆண்கள் தங்களின் தோள் துண்டு ஆகியவற்றை கூட, முக கவசமாக பயன்படுத்தலாம்.

அதற்கு முன், கைக்குட்டை, துப்பட்டா, தோள் துண்டை நன்றாக துவைத்து, கிருமிநாசினி அல்லது சோப்பால் சுத்தம் செய்த பின் மட்டுமே, முக கவசமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

dinamalar