மோடி அறிவித்த ஊரடங்கு சரியான நடவடிக்கை – கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது : மத்திய அரசு தகவல்

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

பிரதமர் ஊரடங்கை அறிவித்ததும் இரட்டிப்பாக உயர்ந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியதாவது:-

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊரடங்கை அமல்படுத்துவது மற்றும் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பெருமளவில் பயன் அளித்துள்ளது.

கடந்த மார்ச் 21-ந் தேதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயரத்தொடங்கியது. பிரதமர் ஊரடங்கை அறிவித்ததும் இரட்டிப்பாக உயர்ந்து வந்த பாதிக்கப்பட்டடோரின்

எண்ணிக்கை ஒரு நாளைக்கு கணிசமாக குறையத் தொடங்கியது. வெளிநாட்டு பயணிகளுக்கு தடை, சமூக விலகல் ஆகியவை நல்ல பலனை அளித்தன. இதற்கு இடையில் சில இடையூறுகளும் ஏற்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நேரம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-

கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. கடந்த 14 நாட்களாக 80 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,684. மொத்த எண்ணிக்கையில் 20.57 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

dinamalar