டெல்லியில் ரெயில் பெட்டி தனிமை வார்டில் முதல்முறையாக கொரோனா நோயாளி அனுமதி

ரெயில் பெட்டி தனிமை வார்டு

டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டி தனிமை வார்டில் முதல் நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே துறை சார்பில் 500 ரெயில்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளில் தலா 16 படுக்கைகள் இருக்கும். டெல்லி ஷாகர் பஸ்த் என்ற ரெயில்நிலையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை வார்டாக மாற்றப்பட்ட 50 ரெயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தனிமை வார்டில் முதல்முறையாக கொரோனா இருப்பதாக சந்தேகப்படும் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் 15 நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டெல்லி ஷாகர் பஸ்த் ரெயில் நிலையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதல் நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மாவ் ரெயில்நிலையத்தில் 59 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

malaimalar