மக்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு தினத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Malaimalar