பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் பலி – ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. அங்கு மின்னல் தாக்கி 17 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேர், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகினர் என தெரிவித்தது. மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்களது குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

 

Malaimalar