இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக காற்று மாசு எதிர்ப்பு தலை கவசம் அறிமுகம்

தூய்மையான காற்றை சுவாசிக்க இந்த தலை கவசம் உதவுகிறது. தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களுடன் தொழில் நிறுவனம் ஒப்பந்தம். காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குளிர் காலங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்து, ஷெல்லியோஸ் டெக்னோலேப்ஸ் நிறுவனம் காற்று மாசு எதிர்ப்பு தலைக் கவசத்தை தயாரித்துள்ளது.

இந்த தலைக்கவசத்தில், புளூ டூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி, தலைக் கவசத்தை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது.

இதன் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியை பெற்று, நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் இந்த தலைகவசம் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தலைக்கவசம் தயாரிப்பதில் முன்னணியிலுள்ள நிறுவனங்களுடன், வணிக அடிப்படையிலான ஒப்பந்தங்களில், இந்த புதிய தொழில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

 

-mm