இங்கிலாந்து-இந்தியா உறவை இரு வழி பாதையாக மாற்ற விரும்புகிறேன்: ரிஷி சுனக்

எங்கள் மாணவர்கள் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது. இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடியது பெரிய அளவு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், வடக்கு லண்டனில் கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

ஆப் சப் மேரே பரிவார் ஹோ (நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்று அவர் இந்தி மொழியில் உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் வணிகத்திற்கான இங்கிலாந்தின் வாய்ப்பைப் பற்றி நாங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம், ஆனால் உண்மையில் நாம் அந்த உறவை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும், ஏனென்றால் இங்கிலாந்தில் உள்ள நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடியது பெரிய அளவு உள்ளது.

-mm