ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்து சாதனை

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.

விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார்.

அப்போது பேசிய அவர், இந்த ரத்த தான முகாம், தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் 1 வரை நாடு முழுதும் நடக்கும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.

ரத்த தானம் செய்ய விரும்புவோர் ஆரோக்ய சேது செயலி அல்லது இ ரக்த்கோஷ் இணைய தளத்தில் பதிவு செய்யலாம். ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார். இந்நிலையில், விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்துள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

 

-mm