கொச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கத்தை பேஸ்டாக மாற்றி கடத்தி வந்த பயணி கைது

வளைகுடா நாட்டில் இருந்த வந்த விமானத்தில் கொல்லத்தை சேர்ந்த குமார் என்ற பயணி வந்தார். ரூ.49 லட்சம் மதிப்பிலான சுமார் ஒரு கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கொச்சி விமான நிலையத்திற்கு வளைகுடா நாட்டில் இருந்த வந்த விமானத்தில் கொல்லத்தை சேர்ந்த குமார் என்ற பயணி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் குமாரின் உடமைகளை பரிசோதித்தனர். இதில் அவரது செருப்பில் தங்கத்தை பேஸ்டாக மாற்றி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ரூ.49 லட்சம் மதிப்பிலான சுமார் ஒரு கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த குமாரையும் கைது செய்தனர்.

 

-mm