பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும்: சோனியா காந்தி

சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம் .பி. முன்னிலை வகிக்கிறார்.

இந்த மாநாட்டில் “இந்தியா” கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.

ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. மாநில சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி.

மொழி, சாதி, மதம் கடந்து சிந்தித்து உழைத்தவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக ஈடுபட்டவர் கருணாநிதி.
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழக காவல் துறையில் நான்கில் ஒரு பங்காக பெண்கள் உள்ளனர். அரசு பணிகளில் பெண்களுக்கான பணியிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். தாய் சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. பெற்று தந்த உரிமைகளை எல்லாம் சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

-td