குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நேற்று முன்தினம் மாலை பிஹாரை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில் 2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்தனர். அவர்களை காப்பாற்றச் சென்ற மற்ற2 தொழிலாளர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் 4 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

 

 

-ht