நீண்ட இடைவெளிக்கு பின் மேடை ஏறுகிறார் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறைவாசம் கண்டு, பிணையில் வெளிவந்துள்ள கனிமொழி, வரும் 15-ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரத்தில் நடக்கும் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் கட்சியில் கசிந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின், அரசியல் ரீதியில் கனிமொழி கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்கள், வரும் 9-ம் தேதி மாவட்ட அளவில் நடக்கவுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழியின் பெயரும் இடம் பெறவில்லை. சென்னை பனகல் மாளிகை முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். வரும் 15-ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து, மாவட்ட வாரியாகப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்தார்.