செயற்கை மனித மூளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி

செயற்கையாக மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கணினியை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மூளை செயல்பாடுகள் தொடர்பான நோயை தடுப்பது குறித்த ஆராய்ச்சிக்கு இந்த அரிய கண்டுபிடிப்பு உதவும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சியை 12 ஆண்டுகளில் முடிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர் என தெரிகிறது.