ஐஸ்கிறீம் வாங்குவதற்காக கடற்கரையில் தரை இறங்கிய வானூர்தி!

பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான மீட்புப்பணி வானூர்தி ஒன்று பிரித்தானியக் கடற்பரப்பில் அவசரமாகத் தரையிரங்கியுள்ளது. எதற்கு என்று கேட்கின்றீர்களா?

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக மட்டும் தான் அந்த வானூர்தி தரை இறங்கியது என்பதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள Winterton-on-Sea, Norfolk பகுதியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

வானூர்தியில் இருந்து இறங்கி ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற விமானப்படையைச் சேர்ந்த பெண் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்,

கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானூர்தியை விட்டு இறங்கி சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் “மீட்பு நடவடிக்கை எதற்காவது வந்துள்ளீர்களா? “எனக் கேட்டனர்.

“இல்லை, நாங்கள் ஐஸ்கிரீம் வாங்கத் தான் வந்தோம் என்று கூறினேன். நான் அவ்வாறு கூறியதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை” என்கிறார் அந்த விமானப் படையைச் சேர்ந்த பெண்.

பாருங்க வானூர்தியை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று?