வரலாறு காணாத உச்சகட்ட பாதுகாப்பில் இந்தியா

இந்திய நாட்டின் 66வது சுதந்திரதினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, இந்தியா பூராகவும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மக்கள் அதிகம் புழங்கும் இடம், வழிபாட்டுத் தலங்கள், புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

TAGS: