இந்தியாவில் குடித்த அமுத பானமே ஆயுளின் ரகசியம் என்கிறார் 110 வயது பிரிட்டிஷ்காரர்

பிரிட்டனின் மிகவும் வயதுகூடிய நபரான ரெக் டீன் ஞாயிறன்று தனது நூற்று பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இவர் இளைஞராக இருந்தபோது இந்தியாவில் இவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு விநோத அமுத பானம்தான் அவருடைய நீண்ட ஆயுளின் ரகசியம் என்று தாங்கள் நினைப்பதாக ரெக் டீனின் மகன் கிறிஸ்டோஃபர் கூறினார்.

சேற்று நிறத்தில் ஒரு பானத்தை தனது தந்தைக்குக் கொடுத்த இந்திய மருத்துவர் ஒருவர், இதனைப் பருகினால் நூறு வயதைத் தாண்டி அவர் வாழ்வார் என்று கூறியிருந்ததாக கிறிஸ்டோஃபர் கூறினார்.

தேவாலயம் ஒன்றில் பணியாற்றிவந்த ரெக் டீன், எண்பது வயதில்தான் வேலையிலிருந்தே ஓய்வுபெற்றிருந்தாராம்.

TAGS: