இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தில் 55 தீவிரவாத முகாம்கள்

அகர்தலா: இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடும், 55 வங்கதேச தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச இராணுவ அதிகாரியிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், மிகவும் ஏழ்மை நாடு. இந்தியாவின், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுடன், 1,900 கி.மீ., எல்லை பகுதியை, வங்கதேசம் கொண்டுள்ளது. அங்கிருந்து, தினமும், ஆயிரக்கணக்கானோர், இந்தியாவிற்குள் ஊடுருவி வரும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக ஏராளமான தீவிரவாத முகாம்களும், வங்கதேச எல்லையில் செயல்படுகின்றன.

அவ்வப்போது, அந்த முகாம்கள் அழிக்கப்பட்டாலும், இப்போது, 55-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன. சில நாட்களுக்கு முன், திரிபுரா மாநிலத்தின் சில்ஹெட் நகரில் நடந்த இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் தீவிரவாத முகாம் பட்டியலை இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வழங்கினர். தீவிரவாத முகாம்கள் பட்டியலை, வங்கதேச அதிகாரிகளிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

TAGS: