லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் தான் போடவேண்டும் – அன்னா ஹசாரே

புதுடெல்லி : இந்திய மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டம் குப்பைத் தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று போராடி வரும் அன்னா ஹசாரே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த பயனும் இல்லை. அரசின் இந்த சட்டம் ஊழலை ஒழிக்க பயன்படாது. அரசின் லோக்பால், குப்பைத் தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும். நாங்கள் தயாரித்துள்ள லோக்பாலை சட்டமாக நிறைவேற்றும் வரை எங்கள் இயக்கத்தில் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: