பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை

nithyasreeசென்னை: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்த மகாதேவன், கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் வந்தபோதுடிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்லார்.

இதனையடுத்து காரைவிட்டு இறங்கிய அவர், திடீரென  ஆற்றில் குதித்துள்ளார்.

அந்த வழியாக சென்றவர்கலும், டிரைவரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.

நேற்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், இச்சம்பவம் கர்நாடக இசைக்கலைஞர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சியா? மறுப்பு

இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும்,  தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  தகவல் வெளியானது.

இதனிடையே மகாதேவன் தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமல்ல என்றும், அவரது தாயார் கடந்த ஏப்ரல் மாதத்தில் மரணமடைந்ததிலிருந்து, அந்த துயரம் காரணமாக அவர் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாகவும் நித்யஸ்ரீ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நித்யஸ்ரீ தற்கொலை முயற்சிக்கவில்லை என்றும், கணவர் இறந்த அதிர்ச்சியில் மட்டுமே அவர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி ஆவார்.