ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே இந்தியாவில் கால் வைக்கக் கூடாது : பீகார் சட்டமன்ற உறுப்பினர்

Som Prakashஇலங்கை அதிபர் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து,  நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்ட ஒரு மனித மிருகம் இந்தியாவிற்கு வருவது பாரத நாட்டிற்கே அவமானம். ஆகவே, அவர் இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார் பீகார் ஒபரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங்.

முன்னாள் காவல் துறை அதிகாரியான இவரின் குறிக்கோள் லஞ்ச ஒழிப்புதான். இவர் தற்போது ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

‘சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. ராஜபக்சே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களுக்கான உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் 150,000 தமிழர்களின் உயிர்களை பறித்தது.

தமிழர்கள் இருந்தால்தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் இலங்கை அதிபர் இந்தியா வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்தகயா, சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சை போதிpப்தற்கு இந்த இடத்திலிருந்துதான் துவங்கினார். அப்பேர்ப்பட்ட இந்த மண்ணில்தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த பாவி மகிந்த ராஜபக்சே வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது.

7 ஆம் தேதி அன்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து புத்தகயாவில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TAGS: