பாலச்சந்திரன் கொல்லப்பட்டதன் எதிரொலி: சென்னையில் தாக்குதல்!

protest_in_tamil_naduதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை சனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிமனை தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷ

இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிமனை மீது நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர்கள் கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் பணிமனை கண்ணாடி சேதமடைந்ததுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்டதன் எதிரொலியாக மேலும் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: