சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகை; டெசோ கூட்டத்தில் முடிவு!

karunanidhiதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.02.2013) காலை தொடங்கியது. டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில், வருகிற 5-ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்கும் என்பதை இந்திய மத்திய அமைச்சர் வி நாராயணசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

TAGS: