இலங்கைத் தமிழர்கள் குறித்து வைகோவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

manmohanதுபாயில் தவித்த 19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பாமல் வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில்,  ‘’ துபாயில் உள்ள 19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப, துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும், உயிர்க் கொலைக்கும் ஆளாவர். எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வைகோ இம்மாதம், 2ம்தேதி கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக, வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தில், ” ஐ.நா., மனித உரிமை கமிஷன் மூலம், 19 இலங்கை தமிழர்களை, துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’ எனக் கூறியுள்ளார்’’என்று கூறப்பட்டுள்ளது.

TAGS: