சீமான் இயக்கத்தில் பகலவன் : விஜய்க்கு பதில் ஜெயம் ரவி!

vijay-seemanசீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகவிருந்த திரைப்படம் தான் பகலவன். கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி எல்லாம் சரிவர முடிந்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில தவிர்க்கமுடியாத காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.

விஜய்க்காக பொறுத்து பொறுத்துப் பார்த்த சீமான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூட விஜய்யை கொஞ்சம் காட்டமாக பேசியிருந்தார். ’விஜய் இல்லைன்னா வேற நடிகரே இல்லையா?’ என்ற ரீதியில் பேசியிருந்த சீமான் விஜய் முதலில் ஒப்புக்கொண்டு பிறகு முடியாது என்று கைவிட்ட பகலவன் படத்தை தற்போது ஜெயம் ரவியின் கையில் கொடுத்திருக்கிறாராம்.

சில தினங்களுக்கு முன்பு கோயமுத்தூரில் சீமானிடம் பகலவன் கதையை மேலோட்டமாக கேட்ட ஜெயம் ரவிக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கதையை கேட்ட உடனேயே இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பதாக ஒப்புக்கொண்ட ஜெயம் ரவி கதைக்கேற்ப தன்னை தயார்படுத்த முழுக்கதையையும் கேட்கவிருக்கிறாராம். இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார்.

முதலில் விஜய் நடிப்பில் உருவாகவிருந்த பகலவன் திரைப்படத்தை தாணு தயாரிப்பதாகத்தான் இருந்தது.  துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருந்த எஸ்.ஏ.சிக்கு பட்ஜட் கையை கடித்ததால் துப்பாக்கி தாணுவின் கைக்கு மாற பகலவன் கைவிடப்பட்டது.

தயாரிப்பாளரும் கைவிட்டு ஹீரோவும் கைவிட்ட நிலையில் இருந்த சீமானிடம் தாணு ’பகலவனை தயாரிப்பதாக சீமானுக்கு வாக்கு கொடுத்துவிட்டு, தற்போது இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் கண்டிப்பாக சீமானின் அடுத்த படத்தை நான் தயாரிப்பேன்’ என்று அப்போது உறுதி கூறியிருந்தார்.தனது வாக்கை காப்பாற்றும் விதத்தில் தான் தாணு சீமான் – ஜெயம் ரவி இணையும் திரைப்படத்தை தயரிக்கிறார்.

 

TAGS: