தொடரும் மோசடி! சர்ச்சையில் சிக்கும் பிரபு சாலமன்!

prabhuinsideஇயக்குனர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் நான் ‘பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு  உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு  லட்சம் கொடுத்துள்ளேன்.

மீதி மருதுவசெலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்’ என்று  சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள் என்று கூறி ஏமாற்றி உள்ளனர்.  அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டு ஏமாந்துவிட்டனர்.

இதுகுறித்து பிரபுசாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம் அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன், வேதம்புதிது கண்ணன் மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர்.

அதை செய்த நபர்தான் என் பெயரையும் சொல்லி மோசடி செய்துள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது” என்று கூறியுள்ளார். இது சம்பந்தமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளாராம் பிரபு சாலமன். இதுபோன்ற மோசடிகளால் தொடர்ந்து திரையுலக முக்கிய நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

TAGS: