புத்த கயாவில் துறவி உண்ணாவிரதம்

india14713bபாட்னா : புத்த கயாவுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி, புத்தத் துறவி ஒருவர், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள, புத்த மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, 2,550 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புத்த கயா கோவில் வளாகத்தில், இம்மாதம், 7ம் தேதி, பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது, இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கோவில் மற்றும் வளாகத்திற்கு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி, வந்தே புத் சாகர், 60, என்ற புத்த மதத்துறவி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை, நேற்று முதல் துவக்கியுள்ளார்.

சி.எஸ்.ஐ.எப்., பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என, அந்தத் துறவி வலியுறுத்தி வருகிறார்.

TAGS: