ஜார்கண்ட் அட்டூழியம் ; விடுதியில் தங்கிய 4 மைனர் பெண்கள் கடத்தி கற்பழிப்பு

Minor-girl-rapeபாகூர் : ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தான் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது 4 மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இங்குள்ள பாகூர் மாவட்டத்தில் லிட்டிபரா பிளாக்கில் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு சுமார் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் மொத்தம் 15 பேர் வந்தனர். இவர்கள் இந்த ஹாஸ்டலுக்குள் அத்துமீறி நுழைந்தனர், இங்கு இருந்த 4 மைனர் பெண்ளை வலுக்கட்டாயமாக இழுத்தனர். ஏனையோர் தடுக்க முற்பட்டபோது மிரட்டி வார்டன் மற்றும் சில பெண்களை தனி அறையில் போட்டு பூட்டினர். 4 மைனர் பெண்களை காட்டுப்பகுதிக்கு கடத்தி கொண்டு சென்றனர். இந்த மைனர் பெண்கள் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுதிக்கு திரும்பினர்.

அந்த இளைஞர்கள் தங்களிடம் தவறாக நடந்து கொண்டனர் என திரும்பிய பெண்கள் கூறினர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். 4 மைனர் பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மைனர் பெண்கள் 12 முதல் 15 வயது வரைக்குட்பட்வர்கள். கற்பழிக்கப்பட்டவர்கள் மலை வாழ் மக்கள் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபகாலமாக இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் , மற்றும் உ .பி. மாநிலத்தில் சில பெண்கள் கற்பழிப்பு , உள்ளிட்டவை பிரபலமாக பேசப்படுகிறது. அதிகரித்து வரும இந்த குற்றத்தை குறைக்க கடும் சட்டங்கள் கொண்ட வரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதற்கான கடுமையான சட்டம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இன்னும் இறங்கவில்லை.

TAGS: