மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து

india20713bமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்று மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் ஒரு எஸ்ஐ தலைமையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கோயிலின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோயிலுக்குள் பைகள் கொண்டு வர அனுமதி இல்லை. அங்குள்ள கடைகளில் பேட்டரிகள், எமர்ஜென்சி விளக்குகள் போன்ற பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டர் சாஜித்குமார் தலைமையில் 5 பேரும், அதிவிரைவு படை கமாண்டர் ஸ்ரீ குமார் தலைமையில் ஒரு பிரிவினரும் நேற்று கோயிலின் கருவறை, வரைபடம் மற்றும் கடைகள் ஆகியவற்றை சோதனை செய்துள்ளனர்.

பின்பு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கோயில் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பாதுகாப்பு படையினர் திட்டமிட்டுள்ளனர்.

TAGS: