இந்திய மாநிலங்கள் துண்டாகும் அபாயம்!

India-Mapடார்ஜிலிங் : தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனிமாநில அந்தஸ்து பெரும்பட்சத்தில் கூர்காலாந்தையும் பிரிக்க கூர்கா ஜன்முக்தி மோர்சா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் 3 நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதே போன்று மகாராஷ்டிராவில் இருந்து விதர்பா பகுதியை பிரித்து தனி மாநிலமாக்க அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

கூர்காலாந்து போராட்டம் காரணமாக டார்ஜலிங் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாவை டார்ஜிலிங்குடன் ஒப்பிட வேண்டாம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Click Here
TAGS: