இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: பாகிஸ்தான் 9 பேருக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி

islamic-terroristஇந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் போராளிகள் பயிற்றப்படுவதாக இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தாய்பா அமைப்பைச் சேர்ந்த 9 போராளிகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இவ்வாறான 3 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்த மாதம் நடுப்பகுதி வரையில், குறித்த போராளிகள் 9 பேரும் இடைக்கிடையில் பலதடவைகள் தமிழ் நாட்டுக்கு வந்து சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இலங்கையின் கடவுச் சீட்டுகளை பயன்படுத்துவதுடன், சிங்கள மீனவர்களின் உதவிகளுடன் தமிழகத்துக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மதுரை அல்லது மயிலாடு துறையை தாக்கக்ககூடும் என்று அதி முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மேலும் 8 பேருக்கு பாகிஸ்தானில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதாகவும் இந்திய புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: